தமிழகத்தில் தலைதூக்குகிறது ஹிஜாப் – மத மோதலை உருவாக்க எண்ணும் சமூக விரோதிகளின் நடவடிக்கை தடுக்கப் படவேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கல்வியானது, அறிவுத்திறன் மற்றும் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கின்ற, குறிப்பாக வருங்கால இந்தியா என கருதப்படுகின்ற மாணவர்களை நல் வழிப்படுத்தும் ஒரு உன்னத வழிமுறையாகும்.
ஆனால் படிக்கும் மாணவிகள் மனதில் வன்மத்தை வளர்க்கும் விதமாக, அடிப்படை இஸ்லாமிய மதவாத சக்திகள் தூண்டுதலால் தற்போது திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அழுத்தம் தருவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.
இது பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை என்ற நோக்கத்தை சிதைப்பதாகும். மேலும் இதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய மாணவர்கள் யாரேனும் காவி துண்டு அணிந்து வரும் சூழல் வரலாம். இதனால் மத நல்லிணக்கம் சீர்கெட்டு, மாணவர் சமுதாயத்தில் தேவையற்ற மத பாகுபாட்டை இது உருவாக்கலாம்.
ஆகவே கல்லூரி, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க கூடாது என்பதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு முளையிலே இந்த விஷச்செடியை அழித்திட வேண்டும்.
இல்லையெனில் திமுக ஆட்சி வந்தாலே மதக் கலவரங்கள் உருவாகும் என சிறுபான்மை சமுதாயத்தினர் சிலர் தேர்தல் நேரங்களில் பேசியது உண்மைதான் என பொதுமக்கள் கருதக்கூடும்.
ஆகவே பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் விரைந்து அடிப்படையில் செயல்பட்டு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்கள் வருவதை தடுத்திட வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் வலியுறுத்துகிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.