கொரோனா அதிகரிப்பால் சிக்கல்: உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் அதானம் எச்சரிக்கை!

Tetras Adenom - 2026

தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியதால் கொரோனா பரவல் முடிந்துவிட்டது, ஒமைக்ரான் வீரியம் குறைந்தது என்று நினைப்பதும், அவ்வாறு பேசுவதும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.

முனிச் நகரில் நடந்து வரும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் பங்கேற்றார்.

அப்போது விரைவில் குணமடைவோம்; பெருந்தொற்றிலிருந்து வெளியேற வழிதேடுவோம்” என்ற தலைப்பில் கெப்ரியாசிஸ் பேசியதாவது:

இப்போதுள்ள சூழலில் சில நாடுகளில் பெருசதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி விட்டதால் கொரோனா முடிந்துவிட்டது என்றும், ஒமைக்ரான் பரவல் தீவிரம் குறைந்தது எனவும் நினைத்திருப்பதுதான் ஆபத்தானது.

பெருந்தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாரந்தோறும் உலகளவில் 70ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள்.

ஆப்பிரிக்கப் பகுதியில் 83 சதவீதம் பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கூட செலுத்திக்கொள்ளவில்லை. உலகளவில் சுகாதாரச் செயல்முறை வேதனையாகவும், கொரோனா அதிகரிப்பால் சிக்கலில்தான் இருக்கிறது

கொரோனாவுக்கு உகுந்த சூழலை மக்கள் உருவாக்கினால், விரைவாக பரவக்கூடிய, மோசமான உயிர்சேதங்களை உருவாக்கக்கூடிய உருமாற்ற வைரஸ் உருவாகலாம்.

உலகளவில் சுகாதார அவசர நிலையை இந்த ஆண்டுடன் நாம் முடிக்க முடியும். அதற்கான கருவிகள், நமக்குத் தெரியும்.

தடுப்பூசியை உலக மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நிதியை அனைத்து நாடுகளும் வழங்கிட வேண்டும். அதற்கு 1600 கோடி டாலர் பற்றாக்குறை நிலவுகிறது.

தேசிய அளவிலும், உலகளவிலும் சுகாதாரத்தை வலுப்படுத்தும் வளங்கள் நமக்கு தேவைப்பட்டன. இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதுதான் நமது இலக்கு, கடந்த காலங்களில் நமக்கு கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

குழப்பமும், ஒத்துழைப்பின்றி தொடர்பின்றி இருத்தல் தான் பெருந்தொற்றை மேலும் வளர்க்கும். பொதுவான அச்சறுத்துல்களை எதிர்கொள்வதில் நமக்கு ஒத்துழைப்பும், கூட்டுழைப்பும் தேவை.

பெருந்தொற்றையும், கொள்ளைநோயையும் விரைந்து தடுக்க, கண்டுபிடிக்க, பதிலடி கொடுக்க வலிமையான சுகாதார அமைப்பு முறை, கருவிகள் தேவை.

கொரோனா பெருந்தொற்று எப்போது முடியும் என்றால், நாம் எப்போது முடிவைத் தேர்வு செய்கிறோமோ அப்போது முடியும். ஏனென்றால், இது வாய்ப்பின் அடிப்படையில் இல்லை, தேர்வின் அடிப்படையில் இருக்கிறது
இவ்வாறு டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories