கொரோனா அதிகரிப்பால் சிக்கல்: உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் அதானம் எச்சரிக்கை!

Tetras Adenom - 2026

தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியதால் கொரோனா பரவல் முடிந்துவிட்டது, ஒமைக்ரான் வீரியம் குறைந்தது என்று நினைப்பதும், அவ்வாறு பேசுவதும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.

முனிச் நகரில் நடந்து வரும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் பங்கேற்றார்.

அப்போது விரைவில் குணமடைவோம்; பெருந்தொற்றிலிருந்து வெளியேற வழிதேடுவோம்” என்ற தலைப்பில் கெப்ரியாசிஸ் பேசியதாவது:

இப்போதுள்ள சூழலில் சில நாடுகளில் பெருசதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி விட்டதால் கொரோனா முடிந்துவிட்டது என்றும், ஒமைக்ரான் பரவல் தீவிரம் குறைந்தது எனவும் நினைத்திருப்பதுதான் ஆபத்தானது.

பெருந்தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாரந்தோறும் உலகளவில் 70ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள்.

ஆப்பிரிக்கப் பகுதியில் 83 சதவீதம் பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கூட செலுத்திக்கொள்ளவில்லை. உலகளவில் சுகாதாரச் செயல்முறை வேதனையாகவும், கொரோனா அதிகரிப்பால் சிக்கலில்தான் இருக்கிறது

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

கொரோனாவுக்கு உகுந்த சூழலை மக்கள் உருவாக்கினால், விரைவாக பரவக்கூடிய, மோசமான உயிர்சேதங்களை உருவாக்கக்கூடிய உருமாற்ற வைரஸ் உருவாகலாம்.

உலகளவில் சுகாதார அவசர நிலையை இந்த ஆண்டுடன் நாம் முடிக்க முடியும். அதற்கான கருவிகள், நமக்குத் தெரியும்.

தடுப்பூசியை உலக மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நிதியை அனைத்து நாடுகளும் வழங்கிட வேண்டும். அதற்கு 1600 கோடி டாலர் பற்றாக்குறை நிலவுகிறது.

தேசிய அளவிலும், உலகளவிலும் சுகாதாரத்தை வலுப்படுத்தும் வளங்கள் நமக்கு தேவைப்பட்டன. இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதுதான் நமது இலக்கு, கடந்த காலங்களில் நமக்கு கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

குழப்பமும், ஒத்துழைப்பின்றி தொடர்பின்றி இருத்தல் தான் பெருந்தொற்றை மேலும் வளர்க்கும். பொதுவான அச்சறுத்துல்களை எதிர்கொள்வதில் நமக்கு ஒத்துழைப்பும், கூட்டுழைப்பும் தேவை.

பெருந்தொற்றையும், கொள்ளைநோயையும் விரைந்து தடுக்க, கண்டுபிடிக்க, பதிலடி கொடுக்க வலிமையான சுகாதார அமைப்பு முறை, கருவிகள் தேவை.

கொரோனா பெருந்தொற்று எப்போது முடியும் என்றால், நாம் எப்போது முடிவைத் தேர்வு செய்கிறோமோ அப்போது முடியும். ஏனென்றால், இது வாய்ப்பின் அடிப்படையில் இல்லை, தேர்வின் அடிப்படையில் இருக்கிறது
இவ்வாறு டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்தார்

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories