December 8, 2025, 12:27 AM
23.5 C
Chennai

தனியார் அருங்காட்சியகத்தில் பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள் மறைத்து வைப்பு!

krishna Statue - 2025

சென்னையிலுள்ள தனியார் அருங்காட்சியகத்தில் மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள், பல தொன்மைப் பொருள்கள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியத்தில் வெளிநாட்டிற்குச் சிலைகள் கடத்தப்படுவதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், தொன்மை வாய்ந்த பல சிலைகள் வெளிநாட்டிற்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

natrajar - 2025

கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடி உயரமுள்ள திருவாட்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை, சிறிய நடராஜர் சிலை, சிறிய கிருஷ்ணர் சிலை, பௌத்த மத மந்திரங்கள் அடங்கிய வேற்று மொழி கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய 11 பேழைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எந்தக் கோயிலிருந்து சிலைகள் இது என்பது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதே எம்போரியத்தின் கடைக்கு வெளியே ஒரு உலோகச் சிலை மண்ணில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

powtha mantra - 2025

ஏடிஜிபி நேரடியாகச் சென்று கடைக்கு வெளியே புதைக்கப்பட்டிருந்த கஜ சம்ஹார மூர்த்தி சிவன் சிலையை மீட்டனர். இந்தச் சிலையை சோதனைக்கு முன்னரே சிலர் மண்ணில் புதைத்துவைத்திருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.

இது குறித்து எம்போரியம் நிறுவன அலுவலர்களிடம் நடத்திய விசாரணையில், 1985ஆம் ஆண்டு முதல் கலைநயமிக்கச் சிலைகள், பொருள்களை விற்றுவருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தில்லியிலிருந்து வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிலைகள் தொடர்பாக எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.

powtha - 2025

இந்தச் சிலைகள், கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலைகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தனியார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைப் பிடித்த பிறகே சிலை வாங்கப்பட்ட இடம் குறித்து தெரியவரும் எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Entertainment News

Popular Categories