தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 60.70/சதம் வாக்குபதிவு

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தத நிலையில் மொத்தசராசரி வாக்குப்பதிவு 60.70% சதம் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நேற்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு  துவங்கி மாலை 6மணியோடு நிறைவடைந்தது.

மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பு ஒரே கட்டமாக நடைபெற்றது.ஊராட்சிகளுக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்தது.

வாக்கு பதிவானது நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர்.கொரோனா இல்லாதவர்கள் மாலை 5மணிக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திற்கு வந்தாலும் இவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.சான்றுடன் வந்த கொரோனா பாதித்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 6மணிக்கு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு
சீல் வைக்கும் பணிகள் முகவர்கள் முன்னிலையில் நடத்தி

பலத்த பாதுக்காப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

60.70% வாக்குப்பதிவு:

நேற்று நடந்த பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குப்பதிவு நடந்ததாகவும் இதில்
பேரூராட்சி – 74.68% ; நகராட்சி – 68.22% ; மாநகராட்சி – 52.22% வாக்குப்பதிவானது.
அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவிகிதம், மாநகராட்சிகளில்  கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன.நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவு.
குறைவாக சென்னையில் 43.59% வாக்குப்பதிவானதாக
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினர் தகவல் தெரிவித்தனர்.

எங்கும் ஓட்டுக்கு பணமமயம்:
பொதுவாக மக்களவை சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பணம் தருவார்கள்.உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரமுகர்கள் சொந்த பந்த வேட்பாளர் பார்த்து வாக்களிப்பார்கள்.இதெல்லாம் இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணமே என்ற தாரகமந்திரம் வாக்குப்பதிவு நடந்த இடங்கள் அனைத்தும் நிலவியது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories