வைரலாகும் உயரமான செனாப் ரயில் பால புகைப்படங்கள்!

bridge - 2026

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள Reasi மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே இந்த செனாப் ரயில் பாலம் அமைந்துள்ளது

இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் செனாப் ஆற்றில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட, இந்தியாவில் கட்டப்பட்டு வரும் இந்தச் செனாப் ரயில் பாலம் 35 மீட்டர் அதிக உயரம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

bridge 1 - 2026

மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதுவும் மேகங்களுக்கு இடையில் இருக்கும் காட்சி மிகவும் அழகாக இருக்கிறது.

இதனிடையே பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ராவும், தனது சோஷியல் மீடியாவில் செனாப் ரயில் பாலத்தின் ஃபோட்டோக்களை ஷேர் செய்து உள்ளார்.

bridge 5 - 2026

ஜம்மு & காஷ்மீரில் உள்ள இந்த 1315 மீ நீளமுள்ள செனாப் பாலத்தினுடைய படம். இந்த பாலம் உண்மையிலேயே ஒரு பொறியியல் அதிசயம்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

ஆற்றின் படுகை மட்டத்திலிருந்து 359 மீ உயரத்தில் இந்த பாலம் நிற்கும். உலகிலேயே மிகவும் உயரத்தில் அமைந்திருக்கும் ரயில்வே பாலத்தில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

bridge3 - 2026

அந்த வகையில் தற்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களும் இது பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாட்டின் சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்றான இந்திய ரயில்வே பாலத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் அதைக் காட்டலாம் என்று நினைக்கும் அளவுக்கு அந்தத் தனித்துவம் வாய்ந்த ரயில் பாலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

bridge 4 - 2026

மத்திய அரசின் கூற்றுப்படி, செனாப் பாலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலமாகும். இது சமீபத்திய வரலாற்றில் இந்தியாவில் எந்தவொரு ரயில்வே திட்டமும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிவில்-இன்ஜினியரிங் சவாலாகக் கூறப்படுகிறது.

இந்த பாலம் விரைவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள நாட்டின் மிக தொலைதூர பகுதிகளை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories