செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பற்றிய தீ!

hospital - 2026

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு அருகில் மேற்கொள்ளப்பட்ட வெல்டிங் பணியின் போது தீப்பொறி விழுந்து ஆக்சிஜன் குழாய்களில் தீப்பற்றியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், யாருக்கும் பாதிப்பில்லை.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவ பிரிவில் பிரசவ வார்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டடத்தை அதிகரிக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் குளிர்சாத வசதிக்காக வெல்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.

வெல்டிங் வேலையின் போது எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் குழாய் மீது தீப்பொறி பட்டவுடன் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

chenkalpattu hospital - 2026

இதனால், அருகில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

தகவலறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்தனர். சாதுர்யமாக ஊழியர்களே தீயை அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது; யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து, தீயணைப்பு போலீசார் மற்றும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories