பிரபல மலையாள நடிகை காலமானார்!

Lalitha - 2026

பிரபல மலையாள திரைப்பட நடிகை கே.பி.ஏ. சி.லலிதா ( வயது 74 ) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியான லலிதா மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆலப்புழாவில் உள்ள நாடக கூட்டான இடதுசாரி கேரள மக்கள் கலைக் கழகத்தில் (கேபிஏசி) தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை லலிதா.1969ம் ஆண்டு கே.எஸ். சேது மாதவனின் கூட்டுக்குடும்பம் என்ற படத்தின் மூலம்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

காயங்குளத்தில் இருந்த கேபிஏசி என்ற ஒரு பிரபல நாடக சபாவில் இணைந்து தன்னையே அர்ப்பணித்து கொண்டார்.. அங்குதான் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

அந்த நாடக கம்பெனி பெயராலேயே அவர் கேபிஏசி லலிதா என்று அழைக்கப்பட்டார்… நாடகத்தில் கொடிகட்டி பறந்ததையடுத்து, மலையாள சினிமா உலகம் இவரை இருகரம் கூப்பி அழைத்து கொண்டது. ஏராளமான கேரக்டர்களில் நடித்தார்.

இவரது குணச்சித்திர கேரக்டர்களுக்கு கேரளாவில் தனி ரசிகர் கூட்டமே உண்டு.மிகவும் கவனமாக கதையை தேர்ந்தெடுத்து, அதில் தன்னுடைய நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தினார் லலிதா.

கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா பதவியில் இருப்பவர். இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் சேர்த்து கிட்டத்தட்ட 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர்தான் பிரபல மலையாள டைரக்டர் பரதன். இவர்தான் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் டைரக்டர் ஆவார்.

தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், சுயேச்சை எம்எல்ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார் லலிதா.

லலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லலிதாவின் கணவர் பரதன் கடந்த 1998ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

லலிதாவுக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி என 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சித்தார்த் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார்.

இவரை மலையாள சினிமா துறையினர் மகேஸ்வரி அம்மா என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள். இப்போதும் அப்படியே கண்ணீருடன் அழைத்து, இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories