பிரபல மலையாள நடிகை காலமானார்!

Lalitha - 2026

பிரபல மலையாள திரைப்பட நடிகை கே.பி.ஏ. சி.லலிதா ( வயது 74 ) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியான லலிதா மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆலப்புழாவில் உள்ள நாடக கூட்டான இடதுசாரி கேரள மக்கள் கலைக் கழகத்தில் (கேபிஏசி) தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை லலிதா.1969ம் ஆண்டு கே.எஸ். சேது மாதவனின் கூட்டுக்குடும்பம் என்ற படத்தின் மூலம்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

காயங்குளத்தில் இருந்த கேபிஏசி என்ற ஒரு பிரபல நாடக சபாவில் இணைந்து தன்னையே அர்ப்பணித்து கொண்டார்.. அங்குதான் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

அந்த நாடக கம்பெனி பெயராலேயே அவர் கேபிஏசி லலிதா என்று அழைக்கப்பட்டார்… நாடகத்தில் கொடிகட்டி பறந்ததையடுத்து, மலையாள சினிமா உலகம் இவரை இருகரம் கூப்பி அழைத்து கொண்டது. ஏராளமான கேரக்டர்களில் நடித்தார்.

இவரது குணச்சித்திர கேரக்டர்களுக்கு கேரளாவில் தனி ரசிகர் கூட்டமே உண்டு.மிகவும் கவனமாக கதையை தேர்ந்தெடுத்து, அதில் தன்னுடைய நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தினார் லலிதா.

கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா பதவியில் இருப்பவர். இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் சேர்த்து கிட்டத்தட்ட 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர்தான் பிரபல மலையாள டைரக்டர் பரதன். இவர்தான் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் டைரக்டர் ஆவார்.

தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், சுயேச்சை எம்எல்ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார் லலிதா.

லலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லலிதாவின் கணவர் பரதன் கடந்த 1998ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

லலிதாவுக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி என 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சித்தார்த் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார்.

இவரை மலையாள சினிமா துறையினர் மகேஸ்வரி அம்மா என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள். இப்போதும் அப்படியே கண்ணீருடன் அழைத்து, இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories