மீண்டும் விலை அதிகரித்த தங்கம்

Published:

இன்று மீண்டும்.தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.

கடந்த.24.ம்.தேதி.ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 608 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்து 472 ஆகவும் அதற்கு அடுத்தநாள் (சனிக்கிழமை) ரூ.37 ஆயிரத்து 904 ஆகவும் குறைந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,813 ஆக விற்பனையாகிறது.

ஒரு பவுன் ரூ.37,904-ல் இருந்து ரூ.38,504 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது.

இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-ல் இருந்து ரூ.70.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.69 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?
images 1 - 2026

Related articles

Recent articles

spot_img