December 5, 2025, 10:05 PM
26.6 C
Chennai

கேரளாவில் கேஸ் மூலம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மீன்பிடிபடகுகள் இயக்க ஏற்பாடு…

கேரளாவில் மீன்பிடி படகுகளை ‘எரிவாயு (காஸ்’)வாயிலாக இயக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இங்கு, விரைவில் படகுகளில் காஸ் சிலிண்டர்கள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடலில் மாசு

கேரள அரசின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், கேரள மாநில கடற்கரை மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய மீன்வள தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து, மீன்பிடி படகுகளை காஸ் சிலிண்டர் வாயிலாக இயக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த சோதனை ஓட்டத்தை, மாநில மீன்வளத் துறை அமைச்சர் சஜி செரியன் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: மீன்பிடி படகுகளை இயக்க, தற்போது மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றை விட காஸ் பயன்படுத்தினால், 55 சதவீதம் வரை எரிபொருள் மிச்சமாகும்.மேலும், திரவ எரிபொருட்களில் கசிவு மற்றும் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால், கடலில் மாசு ஏற்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.காஸ் பயன்படுத்துவதால் அவை தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசு குறையும். வேகம் அதிகரிப்புஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், மஹாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள வனஸ் இன்ஜினீயர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, மீன்பிடி படகுகளில் பொருத்துவதற்காக, பிரத்யேகமான சிலிண்டரை தயாரித்துள்ளது.

images 5 - 2025
இல் தி

ஒரு சிலிண்டரில் இருந்து எத்தனை இன்ஜின்களை வேண்டுமானாலும் இயக்கலாம். திரவ எரிபொருட்களை விட, காஸ் வாயிலாக இயங்கும் இன்ஜின்களால் மீன்பிடி படகுகளின் வேகமும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories