தென்காசியில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிலை வைக்கக் கோரி மனு!

tenkasi hindu munnani - 2026

தென்காசியில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவ சிலையை வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசிப் பாண்டியர்கள் என்று பெயர் பெற்ற பிற்கால பாண்டிய மன்னர்களின் ஒருவரும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை சிறப்பான முறையில் வடிவமைத்தவருமான மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனும், அவனுக்குப் பின் வந்த குலசேகர பாண்டியனும் தென்காசி நகரின் வரலாற்றில் முக்கியமானவர்கள். குலசேகர பாண்டியன் பெயரில் தென்காசி மேலப்புலியூர் பகுதியில் குலசேகரநாதர் கோயில் அமையப் பெற்றுள்ளது. சோழப் பேரரசில் மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் அமைத்த தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களைப் போல் தென்காசி நகருக்கு காசிவிஸ்வநாதர் கோயிலையும் குலசேகரநாதர் கோயிலையும் அமைத்தவர்கள் பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும்!

தற்போது தென்காசி தனி மாவட்டமாக அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில், தென்காசி ரவுண்டானாவில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவச் சிலையை நிறுவி, தென்காசி நகரின் பழைமைக்குப் பெயர் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நகரத் தலைவர் நாராயணன் நகர துணைத் தலைவர் சொர்ண சேகர் நகர செயலாளர் காளிமுத்து, நகர செயற் குழு உறுப்பினர் மாரி (எ) மது, இந்து முன்னணி சூர்யா மாரி செல்வம் பாலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories