திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே வள்ளியூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் தனது கடையில் நகைகள் குறைந்து வருவதை கவனித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்த போது கடையில் வேலை பார்த்தவர்கள் நகைகளை திருடியது தெரியவந்தது.இது தொடர்பாக ராமச்சந்திரன் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வள்ளியூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கடையில் வேலை பார்த்து வந்த சுபா மதிய உணவு இடைவேளையின் போது தனது தாயார் விஜய லட்சுமியை (42) வரச்செய்து தினமும் நகைகளை எடுத்து கொடுத்து விட்டு சில போலி நகைகளை திருடிய இடத்தில் மாற்றி வைத்துள்ளது தெரியவந்தது. சுபா மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 41 பவுன் நகைகளை மீட்டனர்.




