வேலூரில் மோசடி போலி பெண் எஸ்.ஐ.கைது…

வேலுார் பகுதியில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த போலி பெண் எஸ்.ஐ.,யை போலீசார் வேலுாரில் இன்று கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு இந்திராநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் . இவர் வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணனிடம் கடந்த மாதம் 25ம் தேதி புகார் செய்தார். அதில், எஸ்.ஐ ரோகிணி என்பவர் குற்ற வழக்கு வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக 24 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வேலுார் காந்திசாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெயர் ரோகிணி என்பதும், போலி எஸ்.ஐ.,யான இவர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

போலீசார் நேற்று இரவு 11:30 மணிக்கு அவரை கைது செய்து, போலி அடையாள அட்டை, போலீஸ் உடைகளை கைப்பற்றினர். காஞ்சிபுரம் மாவட்ட, சுங்குவார் சத்திரத்தை சேர்ந்தவர் ரோகிணி,(32 )போலீஸ் உடையில், போலி போலீஸ் எஸ்.ஐ., அடையாள அட்டை தயாரித்துக் கொண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை செய்வதாக பலரிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் தருவதாக தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் 24 லட்சம் ரூபாய் கடந்தாண்டு வாங்கிக் கொண்டு தலைமறைவானார். மேலும் பலரிடம் போலீசில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜாமினில் வந்த குற்றவாளிகளை சந்தித்து வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவரை வேலூர் மாவட்ட போலீசார் கைதுசெய்தனர். இந்த மோசடிக்கு இவரது கணவர் சந்துரு(35) உடந்தையாக இருந்துள்ளார். சந்துருவை போலீசார் தேடி வருகின்றனர்.

IMG 20220301 WA0001 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories