மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Inscription - 2026

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியைச் சேர்ந்த பாபு , ஜான் மருது ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர் ஆகியோர் பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோயிலில் இரண்டு பழமையான துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கல்வெட்டை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இரண்டு கல்வெட்டுக்களும் கி.பி 700 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது : பிற்கால பாண்டிய மன்னர்களின் தலை சிறந்தவர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216- 1238). இவர் சோழர் ஆதிக்கத்தில் இருந்து மதுரையை மீட்ட பெருமைக்குரியவர்.

இவர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்புகளுக்கும், பல ஏக்கர்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை கோயில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.

நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் கோவில் பராமரிக்கப்பட்டது. இவற்றை தேவதானம் என்று அழைப்பர். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நில தானம் திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோயிலுக்கு வழங்கும் நில தானம் திருவிடையாட்டம் என்றும், சமணம் புத்த பள்ளிக்கு வழங்கும் நில தானம் பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.

சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் 4.5 அடி நீளம் 1.5 அடி அகலம் 9 வரி கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.

இக்கல்வெட்டில் ஸ்ரீ மாறன் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் தேவர்க்கு யாண்டு என சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கல்வெட்டு வரிகளுடன் தொடங்கும் கல்வெட்டு ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவன் பெருமாள் கோவிலுக்கு பேரிகை, சங்கு மற்றும் பூஜை செய்வதற்கான நிலங்களை குறியீடு களாகவும், அரை மா, அரைக்காணி, முந்திரி, கீழரை போன்ற நில அளவை முறையும் நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருவிடையாட்டத்திற்கு கிழக்கெல்லையும், மேற்கு வாய்க்கால்களுக்கு தென்கிழக்கு எல்லையும் திருவிடையாட்டத்திற்கு மேற்கு எல்லை செங்குளத்தில் வடக்கு எல்லை என நிலத்தின் நான்கு எல்லைகளை குறிப்பிட்டு விளைச்சல் பொருள்களை மாகனத் தேவனன் தமிழ்நாட்டரையன் என்பவன் கோவிலுக்கு இவ்வுலகம் உள்ளவரை தானம் வழங்க வேண்டும் குறிப்பிட்டுள்ளது.

கோயிலின் முன்பு குளத்தங்கரையில் 1 அடி அகலம்,4 அடி நீளம், 6 வரி கொண்ட கருங்கலில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது .

நிலத்தின் எல்லை , குளம், இறையிலி போன்ற சொற்கள் இருப்பினும் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தை வைத்து இதன் காலம் கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். என்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories