சகோதரிகள் மூவரையும் மணந்த இளைஞர்!

marriage 2 - 2026

ஒரே நேரத்தில் பிறந்த மூன்று சகோதரிகளை ஒரே நாளில் இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்ட சம்பவம் காங்கோவில் நடந்துள்ளது.
அவரின் இந்த திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற சிறப்புத் திருமண விழாவில், 32 வயதான லுவிசோ, நாடேஜ், நடாஷா மற்றும் நடாலி ஒரே நேரத்தில் பிறந்த மூன்று சகோதரிகளை மணந்தார்.

அங்குள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக சுதந்திரம் உள்ளது என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. லுவிசோவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.!

மூன்று பேரை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘அவர்கள் சகோதரிகள் என்பதால் நான் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது எளிதான முடிவு அல்ல, ஏனென்றால் நான் என்ன செய்கிறேன் என்று என் பெற்றோருக்கு இது வரை புரியவில்லை’ என்று கூறினார்.

மேலும், ‘இன்னொன்றைப் பெறுவதற்கு ஒன்றை இழக்க வேண்டும். கூடுதலாக, ஒருவருக்கு அவரவர் விருப்பங்கள் மற்றும் விஷயங்களைச் செய்வதற்கான சொந்த வழி உள்ளது. அதனால் மற்றவர்கள் என்ன நினைத்தாலும் மூன்று பேரை திருமணம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

marriage - 2026

என் பெற்றோர் என் முடிவை வெறுத்தார்கள் அதனால் தான் அவர்கள் என் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காதலுக்கு எல்லை இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

நடாலியின் மற்ற இரண்டு சகோதரிகளை சந்திப்பதற்கு முன்பு, தான் முதலில் நடாலியை காதலித்தேன். இருப்பினும், நடாலி தனது இரட்டை சகோதரிகளான நடேஜ் மற்றும் நடாஷாவிடம் அறிமுகப்படுத்தியபோது, ​​அவர்கள் இருவரும் என்னை காதலித்தனர். மூன்று பேரும் காதலித்ததால் அவர்களை திருமணம் செய்தேன்’ என்று கூறினார்.

மூன்று சகோதரிகளில் ஒருவர், தாங்கள் சிறுவயதில் இருந்தே அனைத்தையும் பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் கணவனைப் பகிர்ந்துகொள்வது தங்களுக்கு கடினமான தேர்வாக இருக்கவில்லை என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories