புஷ்பா பட ஐக்கானிக் ஆக்க்ஷனை மைதானத்தில் செய்து காட்டிய கோலி!

Published:

virat - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமாகிய விராட்கோலி மிகவும் குறும்புக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும்,

மைதானத்தில் தன்னை சீண்டுபவர்களுக்கு தனது பேட்டால் எப்படி தக்க பதிலடி கொடுப்பாரோ, அதேபோல அவ்வப்போது சில குறும்புத்தனம் செய்து ரசிகர்களையும் கவர்வது அவரது வழக்கம்.

இந்த நிலையில், இலங்கை- இந்தியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாபில் உள்ள மொகாலியில் நடைபெற்று வந்தது.

இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட்கோலி புஷ்பா படத்தில் மிகவும் புகழ்பெற்ற அல்லு அர்ஜூனின் மேனரிசமான தாடியை தடவுவதைப்போலவே விராட்கோலியும் தனது தாடியை தடவி காட்டினார்.

virat kohli - 2026

அவரது இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை தடவிக்கொண்டே புஷ்பா அடங்காதவன்டா என்று கூறுவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடிப்பும், அவரது உடல்மொழியும் பலரையும் வெகுவாக ஈர்த்தது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் ப்ராவோ உள்ளிட்ட பலரும் நடனம் ஆடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கிரிக்கெட் மைதானத்தில் விராட்கோலி அல்லு அர்ஜூனைப் போல செய்து காட்டியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

விராட்கோலி ஏற்கனவே ஹர்பஜன்சிங், ஷிகர்தவான் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் போல மைதானத்தில் நடித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலிக்கு இந்த டெஸ்ட் போட்டி 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img