சர்ஃப்ராஸ் அடித்த முதல் செஞ்சுரி: காலிறுதியில் பாகிஸ்தான்!

Published:

sarfraz-ahmed-pakistanஅடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அசத்தலான சதமடித்து பாகிஸ்தானை காலிறுதிக்குள் கொண்டு சென்றுள்ளார். 11 ஆவது உலகக் கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி 237 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், 27 வயதாகும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் தனது அதிரடி ஆட்டம் மூலம் 101 ரன்களை விளாசி பாகிஸ்தானை காலிறுதிக்கு முன்னேற்றினார். உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பதிவு செய்த முதல் சதம் இது. இந்த சதத்துக்குப் பின்னர் பேட்டியளித்த கேப்டன் மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் இந்த முறை நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டதாகக் கூறினார். கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் இவர்தான்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img