பயணிகள் கவனித்திற்கு.. தெற்கு இரயில்வே அறிவிப்பு!

train service - 2026

ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில் போக்குவரத்து உள்ளது.

இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைந்த விலையில், தங்களின் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் ரயில் பயணம் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இதற்கான பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில் ரயில் பயணத்தில் பயணிகள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை மற்றும் அபராதத்தை தெற்கு ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது,

ரயில் பயணத்தின் போது பயணச்சீட்டு அல்லது பாஸ் இல்லாமல் பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டப் பிரிவு 138ன் படி அப்போது வரை பயணித்த தூரம் அல்லது ரயிலானது புறப்பட்ட நிலையத்திலிருந்து வசூலிக்கப்படும் பயணக்கட்டணம், அபராதமாக செலுத்த வேண்டும். இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 லிருந்து வசூலிக்கப்படுகிறது.

மேலும் ரயில் பயணத்தின்போது தேவையில்லாத காரணத்திற்காக அலாரம் சங்கிலியை இழுத்தால், அவர்களுக்கு விதி 141ன் கீழ், 1000 ரூபாய் அபராதம் அல்லது 12 மாத சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டால் விதி 155 (அ) இன் படி 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டுமே சேர்த்து விதிக்கப்பட்டு உள்ளது.

ரயிலின் மேற்கூரையில் பயணிகள் பயணம் மேற்கொண்டால் விதி 156 இன் கீழ் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படுகிறது.

ரயிலில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தால், 145 (b)ன் கீழ் ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதேபோல் குப்பைகளை ரயிலில் கொட்டினால் சட்டப்பிரிவு 145 (b) இன் படி ஒரு மாத சிறை தண்டனையும் மற்றும் 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்படாத பொருள்களை ரயிலில் விற்பனை செய்து வந்தால், சட்டப்பிரிவு 144ன் படி ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories