புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு!

chatishkar - 2026

சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ்பாகல் நேற்று 2022-23 நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தையும் மாட்டு சாணத்தை கொண்டு செய்யப்பட்ட பெட்டியில் வைத்து சட்டசபைக்கு எடுத்துச் சென்றார்.

இப்பெட்டி ராய்ப்பூரில் கால்நடை வளாகத்தில் 10 தினங்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதாவது சாணப் பொடி, பசை மற்றும் மாவு போன்றவற்றை பயன்படுத்தி இப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த பெட்டியில் சமஸ்கிருதத்தில் “கோமயே வஸதே லக்ஷ்மி” என்று பொறிக்கப்பட்டு, அதற்கு “செல்வத்தின் தெய்வம் லக்ஷ்மி பசுவின் சாணத்தில் வசிக்கிறாள்” என்பது அர்த்தம் ஆகும்.

பட்ஜெட்டை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட்டில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் சமூகத்துறைக்கு 37% , பொருளாதாரத் துறைக்கு 40 % , பொதுசேவைத் துறைக்கு 23 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இதையடுத்து பூபேஷ் பாகல் பேசியபோது, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

அதன்பின் சத்தீஸ்கர் மாநில தொழில்முறை தேர்வு வாரியம் மற்றும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அனைத்து தொழில்முறை தேர்வுகளிலும், மாநிலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.

அதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட மற்றும் ஜன்பத் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படும்.

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 2 கோடியில் இருந்து ரூபாய் 4 கோடியாக உயர்த்தப்படும் என்றும் இதற்காக ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories