சேவல் வெற்போர் விளையாட்டுக்கு அனுமதி வேண்டும்: ஆர்வலர்கள் கோரிக்கை!

seval-sandai
seval-sandai

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் வெற்போர் விளையாட்டிற்கு  அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பாரம்பரிய சேவல் கோழி இனங்கள் பாதுகாக்க நடவடிக்கை.எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனார்.  மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ,பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் சேவல்  வெற்போருக்கு அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாரம்பரிய சேவல் ,கோழி இனங்கள் பாதுகாக்கும் சூழ்நிலை உள்ளதாக சேவல் வளர்ப்போர் கூறியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவல் வெற்போர் (சேவல் கட்டு) தொன்று தொட்டு நடந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இதனால் சேவல் வளர்ப்போர் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் சேவல் வெற்போர் நடத்த அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சேவல் வெற்போர் என்பது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதற்காக நமது பாரம்பரிய‌ பாரம்பரியசேவல் இனங்களான கருங்குவளை, சாம்பல், கருங்குளவி, புள்ளி ,சாம்பல் செவலை, உள்ளிட்ட நமது இன சேவல்களை கொண்டு பாரம்பரிய முறைப்படி சேவல் வெற்போர் நடந்து வந்தது. இதற்கான போட்டிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது .இந்தப் போட்டிகளின் கால அளவு ஒரு மணி நேரம்தான்.

கால்மணி நேரம் சேவல் மோதலும், கால்மணி நேரம் ஓய்வு அளிக்கப்படும். இதனால் பாரம்பரிய சேவல் இனங்கள் நல்ல வலுவுடன் இருந்து வந்தது. சேவல் போட்டிக்கு தயார் செய்யும் பொருட்டு அந்த சேவலுக்கு நாளொன்றுக்கு காலையும் மாலையும் இரண்டு முட்டை வீதம் வழங்குவோம் .

10 பாதாம் பருப்புகள் உள்ளிட்ட உணவுப் பொருளும் வாரம் ஒன்றுக்கு சத்துமாவு வழங்கி அதனை பாதுகாத்து வந்தோம். இந்நிலையில் தொடர்ந்து சண்டையிடும் போது ஒரு வயது மற்றும் 2வயது சேவல்கள் நல்ல வலுவுடன் காணப்படும். நமது பாரம்பரிய கலைகள் அழியாமல் காணப்பட்டு வந்தது.

பல்வேறு காரணங்களை காட்டி தமிழக அரசும் நீதிமன்றமும் இதனை தடை செய்தது இதனால் பல்வேறு ஊர்களில் சேவல் இனங்கள் வளர்க்காமல்  அழிந்து வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சேவல் வெற்போருக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

போட்டிகள் நடத்தப்படுவதால் .மதுரை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகம் பேர் வந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது என கேட்டுக் கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories