December 7, 2025, 10:09 PM
24.6 C
Chennai

20 டன் கார்பன்-டை-ஆக்சைடிலிருந்து ஒரு காரட் வைரம்!

diamond - 2025

நியூயார்க்கை சேர்ந்த ஆடம்பர நகை நிறுவனம் காற்றில் இருந்து வைரங்களை தயார் செய்துள்ளது.

ஏதர் என்ற நிறுவனம் இதனை ஆய்வகத்தில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வைரம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரம் ஏன் சிறப்பு வாய்ந்தது மற்றும் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) உதவியுடன் இந்த வைரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ‘பிரபல நாளிதழ்’ செய்தி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டிற்கு கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணம் என்று உள்ள நிலையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வாயுவின் உதவியுடன் விலைமதிப்பற்ற ரத்தினத்தை தயாரிக்க முடியும்.

தோற்றத்திலும் வேதியல் ரிதியாகவும், சுரங்கம் மூலம் தரையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உண்மையான வைரத்தை போலவே, இந்த வைரம் உள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

இந்த வைரம் 4 நிலைகளில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், ஒரு உலையைப் பயன்படுத்தி, கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

ஹைட்ரோகார்பன் தொகுப்பு செயல்முறை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதைச் செய்வதன் மூலம், கார்பன் டை ஆக்சைடு ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்பட்டது. ஹைட்ரோகார்பன்கள் இரசாயன நீராவியின் உதவியுடன் வைரங்களாக மாற்றப்பட்டன.

ஆய்வகத்தில் ஒரு செயல்முறை மூலம் வைர படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு அது வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட பின் அவை பளபளக்கும் வைரங்களாக மாறுகின்றன

இந்த வைரத்தின் விலை குறித்து நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ரியான் ஷீர்மேன் கூறுகையில், “உலகின் முதல் தரமான வைரங்களை காற்றின் மூலம் உருவாக்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

காற்று மாசுபாட்டை வைரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். ரியான் மேலும் கூறுகையில், காற்றில் இருந்து சுமார் 20 டன் கார்பன்-டை-ஆக்சைடை பிரித்தெடுப்பதன் மூலம் ஒரு காரட் வைரத்தை தயாரிக்க முடியும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories