மதுரை சித்திரை பொருட்காட்சி தமுக்கம் வளாகத்தில் நடத்த கோரிக்கை..

மதுரை அரசு சித்திரைப் பொருட்காட்சியை மதுரை மாட்டுத்தாவணிக்கு பதிலாக வழக்கம்போல் தமுக்கம் மைதானத்தில் நடத்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்களுடன் விமர்சியாக நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளழகர் நிகழ்வு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை இந்த ஆண்டும் பக்தர்களுடன் நடக்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவிழாக்கள் நகரான மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். அந்த நாட்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருவிழா லுக் இந்த ஆண்டு பக்தர் களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கூடவே சித்திரை பொருட்காட்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 40 ஆண்டுகளாக நடந்தது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. அ.தி.மு.க.,அரசு கொண்டுவந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம், கோவை கொடிசியா அரங்குபோல் தமுக்கத்தில் அரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. இதை சுட்டிக்காட்டி பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகில் கொண்டு செல்ல தமிழக அரசு, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளன

. அங்கு எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ்டாண்ட், காய்கறி, பூ, பழ மார்க்கெட் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.மக்கள் பொருட்காட்சியை காண வெகுதுாரம் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கள்ளழகர் எதிர் சேவை, வைகையில் எழுந்தருளல், பூப்பல்லாக்கு, தசாவதாரம் தமுக்கம் அருகே நடைபெறும்.அங்கு கட்டுமான பணி நடைபெறும் இடத்தைத் தவிர, பொருட்காட்சி நடத்த போதிய இட வசதி உள்ளது. தமுக்கத்தில் பொருட்காட்சி நடத்த பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதே கோரிக்கையை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

images 55 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories