December 8, 2025, 6:25 AM
22.7 C
Chennai

மதுரை சித்திரை பொருட்காட்சி தமுக்கம் வளாகத்தில் நடத்த கோரிக்கை..

மதுரை அரசு சித்திரைப் பொருட்காட்சியை மதுரை மாட்டுத்தாவணிக்கு பதிலாக வழக்கம்போல் தமுக்கம் மைதானத்தில் நடத்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி நடைபெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்களுடன் விமர்சியாக நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளழகர் நிகழ்வு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை இந்த ஆண்டும் பக்தர்களுடன் நடக்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவிழாக்கள் நகரான மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். அந்த நாட்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருவிழா லுக் இந்த ஆண்டு பக்தர் களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கூடவே சித்திரை பொருட்காட்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 40 ஆண்டுகளாக நடந்தது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. அ.தி.மு.க.,அரசு கொண்டுவந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம், கோவை கொடிசியா அரங்குபோல் தமுக்கத்தில் அரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. இதை சுட்டிக்காட்டி பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகில் கொண்டு செல்ல தமிழக அரசு, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளன

. அங்கு எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ்டாண்ட், காய்கறி, பூ, பழ மார்க்கெட் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.மக்கள் பொருட்காட்சியை காண வெகுதுாரம் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கள்ளழகர் எதிர் சேவை, வைகையில் எழுந்தருளல், பூப்பல்லாக்கு, தசாவதாரம் தமுக்கம் அருகே நடைபெறும்.அங்கு கட்டுமான பணி நடைபெறும் இடத்தைத் தவிர, பொருட்காட்சி நடத்த போதிய இட வசதி உள்ளது. தமுக்கத்தில் பொருட்காட்சி நடத்த பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதே கோரிக்கையை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

images 55 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories