வரும் மார்ச் 18இல் மீண்டும் உ.பி முதல்வராக பதவியேற்கும் யோகி ஆதித்யநாத்

ஹோலி பண்டிகைக்குப் பிறகு வரும் 18ம் தேதி உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்ய நாத் பதவியேற்க உள்ளதாகவும், புதிய அமைச்சர்கள் குறித்து ஆலோசிக்க இன்று அவர் டெல்லி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் வென்று  41.29 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. அக்கட்சி மீண்டும் வெற்றியை பெற்றதைத்  தொடர்ந்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் நேற்று  முன்தினம் லக்னோவில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அம்மாநில ஆளுநர்  ஆனந்திபென் படேலிடம், தனது ராஜினாமா கடிதத்தை யோகி ஆதித்யநாத் அளித்தார்.  

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் இரண்டாவது முறையாக  ஆட்சி அமைப்பதால், பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  புதிய அரசு அமைந்த பிறகு  நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெறும். புதிய அரசின் பதவியேற்பு விழா, ஹோலி பண்டிகைக்குப் பிறகு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் 18ம் தேதி யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

அன்றைய தினமே அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக உத்தரபிரதேசத்தின் தற்காலிக முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று டெல்லிக்கு வந்து அங்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா  ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது புதிய அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படும் என்று கூறப்படுகிறது. காரணம், முந்தைய யோகி அமைச்சரவையில் துணை முதல்வர் உள்பட 11 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான சூழல் அமைந்துள்ளது.
.மேலும் ஜனாதிபதி உப ஜனாதிபதி ஆகியோரையும்‌ யோகி ஆதித்யநாத் மறியாதை நிமித்தம் சந்தித்து பேசுகிறார்.

gallerye 10181170 2979720 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories