உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை கட்டணமில்லா மல் மீட்பு.. பிரதமருக்கு அண்ணாமலை நன்றி..

உக்ரைனில் தவித்த இந்திய மாணவர்களை கட்டணமின்றி, இலவச விமானங்கள் வாயிலாக மத்திய அரசு மீட்டு விட்டது. கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச விமானங்கள் வாயிலாக, கட்டணமின்றி மத்திய அரசு மீட்டு விட்டது.கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறோம்.

ஆறாவது விமானம் இந்தியா வந்த பின், தமிழக மாணவர்களின் பயண கட்டணத்தை தாம் அளிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். இதுபோன்ற உப்புச் சப்பில்லாத, அலங்காரமான அறிவிப்புகளை வெளியிட கொஞ்சம் கூட குற்ற உணர்வோ, தயக்கமோ அவருக்கு இருந்ததில்லை.மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், தன் திட்டங்களாக அறிவிக்கும் தமிழக அரசு, ஒரு அறிவிப்பு ஆட்சியை மட்டும் நடத்தி கொண்டிருக்கிறது.

 மற்றபடி, அவர்களுக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் இல்லை.மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்ற எதிர்மறை எண்ணமே மேலோங்கி இருக்கிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும், அனைத்து முயற்சிகளுக்கும் தாங்கள் தான் காரணம் என, தி.மு.க., அரசு தம்பட்டம் அடித்து கொள்கிறது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

மத்திய அரசு, மிக அதிகமான மக்கள் நலத் திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறது. இதனால், அந்த திட்டங்களுக்கு, தி.மு.க.,வின் லேபிளை ஒட்டும் வேலையே, தமிழக அரசுக்கு சரியாக இருக்கிறது.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

images 34 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories