சம்பளமும் கொடுக்காமல் கட்டி வைத்து கடை ஊழியரை அடித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

vijay fan - 2026

கடை ஊழியருக்கு சம்பளமும் கொடுக்காமல், கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமும், அதைத் தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

விஜய் மக்கள் இயக்கத்தின் பல்லாவரம் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அன்சர் என்னும் அனிஷ். இவர், பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பல்லாவரம் பகுதியில் ஐஸ் கடை நடத்தி வருகிறார் அனீஷ் .

அனீஷின் கடையில் பல்லாவரத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே பாலாஜிக்கு அனீஷ் சரியாக ஊதியம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாலாஜி கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை.

பாலாஜி வேலைக்கு செல்லாத சமயத்தில் அனீஷின் கடையில் 10 ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் 3 செல்போன்கள் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.

3 நாட்களாக பாலாஜி வேலைக்கு வராததால் அவர்தான் செல்போன்கள் மற்றும் பணத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று அனீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது நண்பர்களை அழைத்துச் சென்று, பம்மல் பகுதியில் இருந்த பாலாஜியை சென்று பார்த்து விசாரித்திருக்கிறார்.

தான் எதையும் எடுக்கவில்லை என்று பாலாஜி மறுத்ததால் ஆத்திரமடைந்த அனீஷ், பாலாஜியை கட்டி வைத்து, உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி கிழே விழுந்ததும் அனீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பாலாஜியை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்திற்காக ஐந்துக்கும் அதிகமான தையல் போடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அன்சர்(எ) அனீஷ் மற்றும் அபிப்ரகுமான், மனோஜ், முகேஷ், ராஜேஷ், மாதவன், சரத்,
சீனு(எ) பாலகுமார், நிசார் அகமது உட்பட 9 பேருரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories