ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் திருக்கல்யாணம் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் கோவிந்தா கோபாலா பக்தி கோஷம் மழுங்க ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தரிசனத்துக்கு இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது..

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஆண்டாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பங்குனி உத்திரமான நேற்று காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னார் கீழ ரதவீதியில் செப்புத்தேரில் எழுந்தருளினர். பின்னர் செப்புத்தேரோட்டம் நடந்தது. ரத வீதிகள் வழியாக பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷமிட்டு செப்பு தேரை இழுத்து வந்தனர். 

இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாளுக்கு ரெங்கமன்னார் மாங்கல்யம் அணிவிக்க இருவருக்கும்திருமணம் பக்தர்களுக்கு நடத்தி வைத்த மாலைமாற்றும் வைபோகம் நடைபெற்றது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் தரிசனம் செய்தனர்.  2 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

IMG 20220318 WA0144 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகிய மங்கலப்பொருட்கள் ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான கருட சேவையின் போது வெங்கடேசப்பெருமாள் அணிந்து கொள்வதற்காக இங்கிருந்து கொண்டு செல்லப்படும். அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிவதற்காக பட்டு வஸ்திரம் கொடுத்தனுப்புவது வழக்கம்.

IMG 20220318 WA0142 - 2026
202203190042597076 AndalRengamannar wedding SECVPF - 2026
IMG 20220318 WA0143 - 2026

இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார்.
இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார். இந்த பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் ரெங்கமன்னார் க்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories