spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பஞ்சாப் அரசில் இன்று பத்து பேர் அமைச்சர்களாக பதவியேற்பு...

பஞ்சாப் அரசில் இன்று பத்து பேர் அமைச்சர்களாக பதவியேற்பு…

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 16ல் பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்று கொண்டார். அதற்கு அடுத்த நாள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் இந்தர்பிர் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பஞ்சாப் அமைச்சரவையில் முதல்வரையும் சேர்த்து 18 பேர் அமைச்சர்களாக நியமிக்க முடியும். இன்று சனிக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

அமைச்சர்களாக ஹர்பல் சிங், பல்ஜித் கவுர், ஹர்பஜன் சிங் இடோ, விஜய் சிங்லா, லால் சந்த், குர்மீத் சிங், குல்தீப் சிங், லால்ஜித் சிங் புலர், பிரஹம் சங்கர், ஹர்ஜோத் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
தொடர்ந்து பிற்பகல், புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் துவங்கி நடைபெற்றது

216031 aap 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe