மத்திய எண்ணை நிறுவனங்களிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்தம்.

மொத்தமாகவாங்கினால் விலை கூடுதல் காரணமாக மொத்தமாக மத்திய எண்ணை நிறுவனங்களிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல்- டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் கடந்த 136 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் விலை உயரும் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.

அதே சமயத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிக அளவில் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை விற்பனை நிலையங்களில் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே மொத்தமாக டீசலை கொள்முதல் செய்பவர்கள் இனி பெட்ரோல் நிலையங்களில் இருந்து டீசலை கொள்முதல் செய்ய தொடங்குவார்கள் என்று தெரியவந்துள்ளது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதை உறுதிபடுத்தும் வகையில் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்பவர்கள் இன்று முதல் தங்களது கொள்முதலை நிறுத்தத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு மத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்துதான் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் தினமும் சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளுக்கு தினமும் 16 லட்சம் லிட்டர் டீசல் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. வழக்கம் போல எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் கொள்முதல் செய்தால் போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.3.5 கோடி இழப்பு ஏற்படும். ஆண்டு ஒன்றுக்கு 1,277 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்கள் இழக்க நேரிடும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

தற்போது மொத்தமாக டீசல் கொள்முதல் செய்தால் கூடுதல் விலை கொடுக்கும் பட்சத்தில் இழப்பு அதிகரிக்கும். அந்த இழப்பை சரிகட்ட வேண்டுமானால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும். எனவே பஸ் கட்டண உயர்வை தவிர்க்க மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த தமிழக போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

அதன்படி மொத்தமாக மத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தி இருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதில் சில்லரை விற்பனை முகவர்கள் மூலம் டீசல் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ் கட்டண உயர்வை தடுக்க முடியும் என்று போக்குவரத்துக் கழக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2013-ம் ஆண்டில் இதேபோன்று மொத்த டீசல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு சில்லரை விற்பனை நிலையங்களில் டீசலை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் பயணிகளுடன் பஸ்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காத்து நின்று டீசல் நிரப்பி சென்றதை காண முடிந்தது. ஆனால் தற்போது சில்லரை விற்பனையாளர்கள் அதிக டீசலை போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கே அளிக்க உள்ளனர். எனவே அரசு பேருந்துகள் சில்லரை விற்பனை மூலம் டீசலை பெற்று கூடுதல் இழப்பை தவிர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
images 98 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

Entertainment News

Popular Categories