இன்று உலக வனதினம் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு …

இன்று மார்ச்21
உலக வன நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம்  கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள், டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, கரையில் வந்து மணலில் குழி தோண்டி, முட்டை போட்டு, மூடி வைத்து செல்லும். ஒரு ஆமை 140 முதல் 170 முட்டைகள் வரை இடும். நாய், பறவைகளிடம் இருந்து முட்டையை பாதுகாக்கும் பணியை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் செய்து வருகின்றனர். சேகரிக்கப்பட்ட முட்டைகள் குஞ்சு பொரிக்க கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட குஞ்ச பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படும்.  குஞ்சுகள் வெளிவர 45 முதல் 55 நாட்கள் வரை ஆகும். முட்டையிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பொரிப்பகத்தில் இருந்து எடுத்து கடற்கரையில் விடுவர்.

இந்த குஞ்சுகள் தானாகவே கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்று விடும். உலக வன நாளை முன்னிட்டு இன்று மார்ச்.21 ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம்  கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் இந்த நிகழ்வு நடைபெற்றது. வனத்துறையினர் கடல் ஆமை குஞ்சுகளை மலர்தூவி கடலுக்குள் அனுப்பி வைத்தனர.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,இராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிகாரிகள் வனத்துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் பாலித்தீன் தவிர்ப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி அனுப்பினர்.

Tamil News large 2526937 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories