அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பதிவாளரின் கையெழுத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆங்கிலத்தில் கையெழுத்து போடுபவர்கள் உள்ளார்கள். தங்கள் தாய்மொழியில் போடுபவர்களும் உள்ளார்கள்.
சிலர் போடும் கையெழுத்துகள் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்வது போல் மிகவும் அழகாக இருக்கும். சிலருடையது கலைநயமிக்கதாக இருக்கும்.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவருடைய கையெழுத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். கையெழுத்தில்தான் ஒருவர் தலையெழுத்தே அடங்கியிருக்கிறது என்பார்களே, இந்த கையெழுத்துக்காரருக்கு தலையெழுத்து எப்படியிருக்கும் என்கிறார்கள் நெட்டிசனகள். மேலும் சிலர் அதான் அரசு வேலையில் இருக்கிறாரே , அப்புறம் என்ன என்கிறார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அரசு மருத்துவமனையில் எலும்பியல் துறையில் பதிவாளராக பணியாற்றும் ஒருவர் கடந்த 4 ஆம் தேதி போட்ட கையெழுத்துதான் வைரலாகி வருகிறது. ஏதோ குச்சி குச்சியாக எந்தவித எழுத்தும் இல்லாமல் உள்ளது அந்த கையெழுத்து.
இதை பார்க்கும் நெட்டிசன்கள் அய்யோ முள்ளம்பன்றி போல் கையெழுத்திட்டுள்ளதாக கூறுகிறார்கள். பரோட்டா சூரி போல் கோட்டையெல்லாம் அழிங்க, முதல்ல இருந்து போடுங்க என சொல்வது போல் நெட்டிசன் ஒருவர் அவரை இன்னொரு முறை கையெழுத்து போட சொல்லுங்கள்.
அவ்வாறு போடும் போது புதிய கையெழுத்தும் வைரலாகி வரும் கையெழுத்து ஒன்று போல் இருக்காது என அடித்து சொல்வதாக நெட்டிசன் சொல்கிறார்.
மேலும் விலங்கின் படத்தை வரைந்திருக்கும் விலங்கு பிரியரான இந்த அதிகாரியின் பெயர் என்னவாக இருக்கும் என இன்னொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் சிலர் அதில் உள்ள கோடுகளை எண்ணி வருகிறார்கள். இன்னொரு நெட்டிசன் வேறு ஒரு பச்சை இங்க் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு இது பாருங்க மாஸ்டர் பீஸ் என்கிறார்.
இன்னொரு நெட்டிசனோ பறவை போன்று இருக்கும் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு இதைவிட சூப்பரான சிக்னேச்சர் வேறு எதுவும் இருக்க முடியாது என்கிறார். கையெழுத்தை இப்படியெல்லாம் கூட போடுவார்களா என ஆச்சரியப்படும் அளவு நெட்டிசன்களின விவாதம் போய்க் கொண்டே இருக்கிறது.