மாணவர்களுக்கு போதைபொருள் சப்ளை&கஞ்சா கடத்தல்_ஐவர் கைது…

திருவண்ணாமலை அருகே, அரசு பள்ளி மாணவர்கள் சிலர், போதையில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில், மாணவர்களுக்கு போதை பொருள் வினியோகித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இதைப்பார்த்த ஆசிரியர்கள், ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்தபோது, அவர்கள் ஆசிரியர்களிடமும் ரகளையில் ஈடுபட்டு, தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பொருட்களை சூறையாடினர்.

திருவண்ணாமலை தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று மாணவர்கள் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜன், 30, என்பவரை ‍போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனில், போதை மாத்திரைகளை வாலிபர்கள் அதிகம் பயன்படுத்துவதாக புகார் வந்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்திய போது, ஆரணி பெரியார் நகரைச் சேர்ந்த நான்கு பேரை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தன. அவர்களுக்கு மாத்திரை விற்ற, ஆரணி, பையூர் கூட்ரோட்டிலுள்ள மருந்துக்கடை உரிமையாளர் விஜயகுமாரிடம் விசாரித்தனர். மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை விற்றதாக அந்த கடைக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.


மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 340 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தியதாக கூடல்நகரை சேர்ந்த தெய்வம், காளப்பன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், கம்மாளப்பட்டியை சேர்ந்த ரமேஷ், மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

images 2022 03 24T125247.978 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories