December 6, 2025, 3:26 AM
24.9 C
Chennai

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு…

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, பதிலளிக்காமல் நிதியமைச்சர் பேப்பரை தூக்கி வீசிவிட்டு வெளியேறியது சபையின் கண்ணியத்திற்கு குறைவான து என்பதால் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளயேறியதாகஎதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்த உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர்.

தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சலும் குழப்பமும் நேரிட்டது. சில நிமிடங்களில் சட்டசபையில் இருந்து எம்எல்ஏக்கள் வெளிநடப்புழ செய்தனர்.

சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இன்றைக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி சட்டசபையில் பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்தநிலையில்
அவமானப்படுத்தினால் எங்களால் சட்டசபையில் உட்கார்ந்து இருக்க முடியாது என இன்று தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது,

ஆஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, பதிலளிக்காமல் நிதியமைச்சர் பேப்பரை தூக்கி வீசிவிட்டு வெளியேறினார். சபையின் கண்ணியத்திற்கு குறைவாக இருந்ததாலும், திட்டமிட்டு வெளியேறி எதிர்க்கட்சிகளை அவமானபடுத்தியதாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம்
அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துகளை ஏற்க அவர் மறுக்கிறார். பன்னீர்செல்வம் கருத்துக்கு பதிலளித்திருக்க வேண்டும். சட்டசபையில் அவமானபடுத்தும்போது எப்படி அமர முடியும். பொது மக்களின் பிரச்னைகள், எண்ணங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு எதிர்க்கட்சிகள் கொண்டு வரும். சபாநாயகர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

IMG 20220324 WA0048 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories