கொல்லங்கோடு மீனபரணி தூக்கத்திருவிழா நாளை துவங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி கோவில் மீனபரணி தூக்கத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விழாவை துவக்கி வைக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான நேர்ச்சை தூக்கம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறுகிறது.

கொல்லங்கோடு பத்ர காளி அம்மனுக்கு வட்ட விளையில் பிரதான கோவிலும், வெங்கஞ்சியில் தூக்க நேர்ச்சை நடைபெறும் கோவிலும் என இரண்டு கோவில்கள் உள்ளன. விழாவின் முதல்நாள் காலை 5.30 மணிக்கு பிரதான கோவிலிலும், காலை 6 மணிக்கு வெங் கஞ்சி கோவிலிலும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

தொடர்ந்து அன்றைய தினம் காலை 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் வெங்கஞ்சி கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணிக்கு அம்மன் சாஸ்தாநகர், திருமன்னம் சந்திப்பு பகுதிகளில் எழுந்தருளி பூஜைகளுக்குப் பின் பிரதான கோவிலுக்கு வந்தடைகிறார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு அம்மன் வெங்கஞ்சி திருவிழா கோவிலுக்கு எழுந்தருளுகிறார். இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்றைய தினம் இரவு 8 மணிக்கு தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கு தேவஸ்தான தலைவர் வி. ராமச்சந்திரன் நாயர் தலைமை வகிக்கிறார். செயலர் வி. மோகன்குமார் வரவேற்றுப் பேசுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விழாவை துவக்கி வைக்கிறார். மத்திய மந்திரி எல். முருகன், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர் .

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

4-ம்நாள் விழாவில் காலை 8.30 மணி முதல் தூக்க நேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவில் (மார்ச் 31) இரவு 7 மணிக்கு நடைபெறும் பண்பாட்டு மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைக்கிறார். 9-ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் தூக்கவில்லின் வெள்ளோட்டம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான நேர்ச்சை தூக்கம் விழாவின் 10-வது நாளான ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணர்த்தல், 4.30 மணிக்கு தூக்ககாரர்களின் முட்டுக்குத்தி
நமஸ்காரம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கி நடைபெறுகிறது.

தூக்க நேர்ச்சை நிறைவு பெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவர் வி. ராமச்சந்திரன் நாயர்,மற்றும் நிர்வாக குழு செய்துள்ளனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை காலை தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக 1.15 மணிக்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகை வந்து சேருகிறார்.

இங்கிருந்து 6.45 மணிக்கு கொல்லங்கோடு கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி தங்குகிறார். பின்னர் நாளை மறுநாள் (27-ந்தேதி) தூத்துக்குடி சென்று சென்னை செல்கிறார். கவர்னர் வருகையையடுத்து குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

images 2022 03 26T085711.818 - 2026
images 2022 03 26T085746.657 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories