குருவாயூர் கோவிலில் பூஜைக்காக புதிய ஹெலிகாப்டர்!

guruvayur 1 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தினசரி ஏராளமானோர் தாங்கள் புதிதாக வாங்கும் வாகனங்களை பூஜைக்காக கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் முதல் முறையாக குருவாயூர் கோயிலில் வாகன பூஜைக்காக ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரவி பிள்ளை. தொழிலதிபர். அவர் வாங்கிய புதிய சொகுசு ஹெலிகாப்டர் குருவாயூர் கோயிலுக்கு வாகன பூஜைக்காக கொண்டு வரப்பட்டது.

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏர்பஸ் எச் 145 மாடல் சொகுசு ஹெலிகாப்டரின் விலை ₹ 100 கோடியாகும். உலகிலேயே இதுவரை இந்த சொகுசு மாடலில் மொத்தம் 1500 ஹெலிகாப்டர்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

பைலட் தவிர 7 பேர் இதில் பயணம் செய்யலாம். கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரம் வரை இந்த இரட்டை இன்ஜின் கொண்ட ஹெலிகாப்டரால் பறக்க முடியும்.

பெட்ரோல் கசிவை தடுக்கும் தொழில்நுட்பமும், விபத்தில் சிக்கினால் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்ஜின் அப்சார்பிங் தொழில்நுட்பமும் இந்த ஹெலிகாப்டரில் உண்டு.

குருவாயூர் கோயிலுக்கு அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் இந்த ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை நடத்தப்பட்டது. ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை நடத்துவதை பார்ப்பதற்காக அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories