கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பாரதி வரிகளை மேற்கோள் காட்டி பேசிய ஆளுநர்!

rn ravi 1 - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத்திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவத்துக்காக மூலக்கோயிலில் இருந்து அம்மன் திருவிழா கோயிலுக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து வான வேடிக்கையுடன் கோயில் தந்திரி கொட்டராக்கரை நீலமனை ஈஸ்வரன் திருக்கொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது கோயிலைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று `அம்மே நாராயணா… தேவி நாராயணா’ என கோஷம் எழுப்பினர்.

ravi rn - 2026

கொல்லங்கோடு தூக்கத்திருவிழா துவக்க நிகழ்ச்சி தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தபின்பு தமிழில் வணக்கம் சொல்லி பேசுகையில், “நான் தமிழ் கற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசி வருகிறேன்.

இந்த ஆலயத்துக்கு வந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். இங்கு சாதி, மத வேறுபாடு கிடையாது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த ஆலயத்தில் வழிபடும் பத்ரகாளி அம்மனை இந்தியா முழுவதும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களது மொழிகளில் மக்கள் வழிபடுகிறார்கள்.

தெய்வம் என்பது ஒன்றுதான், பக்தி என்பதும் ஒன்றுதான். அதைத்தான் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார், `செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என கவிதை பாடினார்.

rn ravi - 2026

ஒருவரது சிந்தனை மதம், எண்ணம், மொழி ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பமாக வாழுவது என்னை வியப்படைய செய்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு வந்திருக்கின்ற எழுச்சிமிகு இளைஞர்களையும், இளம்பெண்களையும் பார்க்கும் போது 2045-க்குள் கண்டிப்பாக இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இந்த கோயில் அனைத்து கோயில்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது இந்த கோயில் அம்மனின் அருள் அனைவருக்கும் உரித்தாகட்டும்” என்றார்.

இந்த கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்கத்திருவிழா வருகிற 4-ம் தேதி நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories