கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பாரதி வரிகளை மேற்கோள் காட்டி பேசிய ஆளுநர்!

rn ravi 1 - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மீனபரணி தூக்கத்திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவத்துக்காக மூலக்கோயிலில் இருந்து அம்மன் திருவிழா கோயிலுக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து வான வேடிக்கையுடன் கோயில் தந்திரி கொட்டராக்கரை நீலமனை ஈஸ்வரன் திருக்கொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது கோயிலைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று `அம்மே நாராயணா… தேவி நாராயணா’ என கோஷம் எழுப்பினர்.

ravi rn - 2026

கொல்லங்கோடு தூக்கத்திருவிழா துவக்க நிகழ்ச்சி தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தபின்பு தமிழில் வணக்கம் சொல்லி பேசுகையில், “நான் தமிழ் கற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசி வருகிறேன்.

இந்த ஆலயத்துக்கு வந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். இங்கு சாதி, மத வேறுபாடு கிடையாது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த ஆலயத்தில் வழிபடும் பத்ரகாளி அம்மனை இந்தியா முழுவதும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களது மொழிகளில் மக்கள் வழிபடுகிறார்கள்.

தெய்வம் என்பது ஒன்றுதான், பக்தி என்பதும் ஒன்றுதான். அதைத்தான் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார், `செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என கவிதை பாடினார்.

rn ravi - 2026

ஒருவரது சிந்தனை மதம், எண்ணம், மொழி ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பமாக வாழுவது என்னை வியப்படைய செய்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு வந்திருக்கின்ற எழுச்சிமிகு இளைஞர்களையும், இளம்பெண்களையும் பார்க்கும் போது 2045-க்குள் கண்டிப்பாக இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இந்த கோயில் அனைத்து கோயில்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது இந்த கோயில் அம்மனின் அருள் அனைவருக்கும் உரித்தாகட்டும்” என்றார்.

இந்த கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்கத்திருவிழா வருகிற 4-ம் தேதி நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories