பைக்கில் டெல்லியில் இருந்து குமரி வந்த எல்லை பாதுகாப்பு படை பெண்கள்…

images 2022 03 28T105253.736 - 2026

எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் குழுவின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் சாதனையை  வெளிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை சாகச மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பெண்கள் குழுவினரின் “பி.எஸ்.எப். சீமா பவானி சவுர்யா சாகச மோட்டார் சைக்கிள் பயணம்-2022” என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி உலக மகளிர் தினமான கடந்த 8-ந்தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.  
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகள் நலச்சங்கத்தின் தலைவர் நுபுர் சிங் எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் பங்கஜ் குமார் சிங் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் 39 பேர் இடம் பெற்று இருந்தனர். 

டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் பேரணி சண்டிகர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தது.

வழியில் பள்ளிக் குழந்தைகள், என்.சி.சி. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாடினர். இவர்கள் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 280 கிலோ மீட்டர் தூரத்தை 18 நாட்களில் கடந்து வந்து சாதனை புரிந்துஉள்ளனர். அவர்களுக்கு  விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ஏக்நாத் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. 

இதில் திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.பேபி ஜோசப் கலந்து கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற 39 எல்லை பாதுகாப்பு படை பெண்கள் குழுவினை சேர்ந்த பெண்களுக்கு பதக்கங்கள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories