மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து பாதிப்பு…

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு இடங்களில் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக – கேரள எல்லை பகுதிகளில் இரு மாநில பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

தமிழக – கேரள எல்லையான வாளையார் களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரை, கோவை சேலம் விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  பேருந்து நிலையங்களில் பெருமளவில் பயணிகள் காத்து கிடக்கும் நிலை காணப்பட்டது.

சென்னையில் பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர
கோயம்பேடு பேருந்து நிலையம், பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.  

பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் முன் வராததால், பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள்  கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறைந்த அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

மதுரையில் தினமும்  900 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி இன்று 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பேருந்து சேவை பாதிப்பால் காலையில்  பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1425 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று 95 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன.அதே சமயம் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆட்டோக்கள் 90 சதவீதம் ஓடவில்லை. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன.மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

images 2022 03 26T153704.615 1 - 2026
IMG 20220328 WA0049 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories