ரூ.2.60 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்கிய வாலிபர் .

மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ரூ.2.60 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்கிய வாலிபர் பிரபலமாகி வருகிறார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. பட்டதாரி இளைஞரான இவர் மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.ரூ.2.60 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க திட்டமிட்டார். இதற்காகச் சில்லறை நாணயங்களை முதலில் பூபதி சேமித்து வந்தார். ரூ.10 ஆயிரம் வரை சில்லறை நாணயங்களை சேமிக்க முடிந்தது.

மீதி பணத்தை பெரிய கோவில்களில் கொடுத்து அதை சில்லறையாக மாற்றினார். இந்த சில்லறைப் பணத்தை கொண்டு, ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே ரூ.2.60 லட்சத்திற்குச் சேமித்து பைக் வாங்கினார்.இதற்காக கிட்டத்திட்ட 2 வருடங்கள் வரை சில்லறை நாணயங்களை சேமித்து வந்துள்ளார். பின்னர் பைக் வாங்குவதற்கு தேவையான பணம் கிடைத்தை அடுத்து பைக் ஷோரூமில் ரூ.2.60 லட்சத்திற்கு சில்லறை நாணயங்களை கொடுத்தார்.

இதைப்பார்த்து ஊழியர்கள் ஆச்சரியப்பட்டு, முதலில் பணத்தை வாங்க மறுத்தனர். பின்னர், இந்த அனைத்து நாணயங்களும் தனக்குச் சொந்தமானது என கூறிய பிறகே பூபதிக்கு பைக் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனது சேனலில் சுவாரசியமான வீடியோவை வெளியிட வேண்டும் என்பதற்காகவும் இவர் இப்படி செய்ததாக பூபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க வருடமாக பணம் சேர்த்துக்கொண்டு இருந்தேன். குறிப்பிட்ட மாடல் பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

தொடக்கத்தில் சேமித்த போது 10 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறைகள் இருந்தது. மற்ற பணத்திற்கு ரூபாய் நோட்டுகள் இருந்தது. நான் பைக் வாங்க நினைத்த போது அதன் விலை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது. யாரிடமும் காசு கேட்க கூடாது என்று நானாக முயன்று இந்த பணத்தை சேமித்தேன். பைக் ஷோரூமில் சில்லறைகளை கொடுத்து வாங்க வேண்டும் என்று யோசித்தேன்.

இதனால் தினமும் பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று கோவில்களுக்கு போய் சில்லறைகளை பெற்றேன். பணத்தை கொடுத்து பழனி உள்ளிட்ட பெரிய கோவில்களில் இருக்கும் உண்டியல்களில் இருந்து சில்லறைகளை மாற்றினேன். இதன் மூலம் முழுக்க முழுக்க ஒரு ரூபாய் காயின்களாக மாற்றி பைக் வாங்கி இருக்கிறேன். முதலில் பைக் ஷோரூமில் இதை யாரும் நம்பவில்லை.அதன்பின் இது சேமித்த காசுதான் என்னிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று கூறிய பின் பைக் ஷோரூமில் ஏற்றுக்கொண்டனர் என்றார்.

IMG 20220328 WA0090 - 2026
202203281351262568 1 sdf. L styvpf - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories