கொலை சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் பெரும் அதிர்ச்சி…

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கள்ளகாதல் விவகாரத்தில் மனைவி ஆள்வைத்து கணவன் மாமியாரை கொலை செய்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( 42). இவரும் இவரது தாய் சவுந்தரம்மாள் (65) என்பவரும் தோட்டத்து வீட்டில் சனிக்கிழமை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஸ் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை நடந்த 10 மணிநேரத்திற்குள் 5 பேர்களை கைது செய்துள்ளனர். இதில் பள்ளி மாணவர்களும் 2 பேர் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், செல்வராஜ்-க்கு திருமணமாகி சுபாஹாசினி (35) என்ற மனைவியும், தன்வந்த் (4) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் வைத்து வளர்த்து வந்தார். மேலும் தோட்டத்து வீட்டில் தங்கி அவரது தாய் சவுந்தரம்மாள் கவனித்து வந்துள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தான் பணம் கொடுத்தவர்களிடம் வசூல் செய்வதற்காக ஒத்தப்பட்டியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (29) என்பவரை வேலைக்கு சேர்த்திருந்தார்.
இதனால் கோபிகிருஷ்ணன் அடிக்கடி செல்வராஜ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் சுபாஹாசினிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அவரது மாமியாருக்கும் தெரியவரவே தனது மகன் செல்வராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபிகிருஷ்ணனை கண்டித்ததுடன், இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.
ஏற்கனவே செல்வராஜிடம் பணம் வாங்கியிருந்த கோபிகிருஷ்ணன் அதனை கொடுக்கமுடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கும் வரக்கூடாது என தெரிவித்ததால் தனது கள்ளக்காதலியையும் பார்க்க முடியாதே என்று சோகத்தில் ஆழ்ந்தார்.

இதனால் செல்வராஜை கொலை செய்ய சுபாஹாசினியுடன் கோபிகிருஷ்ணன் திட்டம் தீட்டினார். செல்வராஜை கொலை செய்து விட்டால் அவரிடம் உள்ள பணம் முழுக்க தனக்கு வந்துவிடும். மேலும் எந்தவித தடங்கலும் இன்றி தனது கள்ளக்காதலியை சந்திக்கலாம் என கோபிகிருஷ்ணன் திட்டம் போட்டார்.
அதன் படி கணவன் மற்றும் மாமியார் தோட்டத்து வீட்டில் தங்கியிருப்பதை சுபாஹாசினி தனது காதலன் கோபிகிருஷ்ணனிடம் கூறினார். இதனையடுத்து தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கூட்டாளிகளுடன் காரில் சென்ற கோபிகிருஷ்ணன் தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் அவரது தாயாரை வெட்டி கொன்றனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகிருஷ்ணன், சுபாஹாசினி, செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்த்பாபு (22) மற்றும் 2 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.கொலை சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 74 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories