கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் சிறை பிடிப்பு..

இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

இதை கண்டித்தும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் களை பார்த்து இந்தப் பகுதி யில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனக் கூறி விரட்டி யடித்தனர்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

தொடர்ந்து கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு, வலைகளையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து எல்லை தாண்டி வந்ததாக கூறி தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மார் கோபோலோ என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்து அதில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த டார்சன், செல்வ ரஸ்க்கி, டோரின், சீமோன் தமிழ்ச் செல்வன், இனிக்கோ, பாலா, சிரில், டென்னிஸ், குணா, முனியசாமி, நம்பு முருகன் ஆகிய 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

images 2022 03 31T095418.578 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories