தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில்திமுக எம்பிக்கள் வெளிநடப்பு..

தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய கூட்டத்தின்போது, அது குறித்து விவாதிக்க அனுமதிக்காததால், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் அந்த மசோதாவை திரும்ப அனுப்பி வைத்தார்.

இதையடுத்து மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அவர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் பதில் உரையில் பேசிய போது  நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

 இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார். இந்த பரபரப்பான சூழலில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் வழங்கி உள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க  கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்க 197 விதியின் கீழ் அதிகாரம் உள்ளது.  இந்த விதியைப் பயன்படுத்தி இன்றைய தினம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர் பாலு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்பப்பெற வேண்டுமென கவன  ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அகில இந்திய மருத்துவ  கல்விக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க  கோரி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு  மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தார்.இந்நிலையில்  சமீபத்தில் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதிலும்  மீண்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு  ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், நீட் தேர்வில் விலக்கு அளிக்க  கோரி தமிழக அரசு ஆளுநரிடம் வழங்கிய மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு  கிடைக்கப் பெறவில்லை எனவும் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றால்  தான் அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என உள்துறை அமைச்சகம்  தெரிவித்து இருந்தது.

 இந்நிலையில் நீட் உள்ளிட்ட 3 மசோதாக்கள்  கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும்  அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் திமுக மக்களவை  உறுப்பினரும் குழு தலைவருமான டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.இந்நிலையில்,  ஆளுநரை திரும்பற பெற வேண்டும், நீட் தேர்வு குறித்த சட்டமன்ற தீர்மானத்தை  குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இப்போது இதுபற்றி விவாதிக்க முடியாது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Nagaland Governor RvRavi PTI - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories