படிப்பும் வேண்டும்.. மடியில் உறங்கும் தங்கையுடன் மணிப்பூர் சிறுமி! வைரல்!

manising - 2026

மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில், தனது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு பாடங்களை கவனித்து எழுதிக் கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம் பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

ஒரு சிலரால் மட்டுமே இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கண்கலங்காமல் இருக்க முடியும் என்று சிலர் கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

மணிங்சிலு பாமேய், 11 வயதாகும் அந்தச் சிறுமி தனது வகுப்பறையில், சகோதரியை மடியில் கிடத்திக் கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்களான தனது சகோதரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்புடன், படிக்க வேண்டும் என்ற உந்துதலும் போட்டி போட இறுதியில் வென்றது இரண்டுமே.

பொறுப்பையும், கல்வி மீதான ஆர்வத்தையும் ஒருசேர கவனிப்பது என்று முடிவெடுத்தார் இந்தச் சிறுமி.

தனது சகோதரியை மடியில் கிடத்திக் கொண்டு, தனது வீட்டருகே இருக்கும் பள்ளியில் பாடம் பயின்று வருகிறார். இவருக்கு இந்த பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து நான்கு சகோதர சகோதரிகள் உள்ளனர்.

இந்தச் சிறுமி குறித்த தகவல்களை பார்த்த பல தரப்பினரும், சிறுமியின் கிராமத்துக்கு ஓடிச் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், குழந்தைகளுக்கான சேவைக் குழுவினரை அந்தக் கிராமத்துக்கு அனுப்பி, சிறுமியின் குடும்பத்துக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் அமைச்சர் ஒருவர், இந்தச் சிறுமியின் கல்விச் செலவு முழுமையையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

தற்போதைய மாணவ, மாணவிகளுக்கும், சிறார்களுக்கும் இந்தச் சிறுமி ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். ஏழ்மையோ வாய்ப்பு மறுப்போ கல்விக்கு எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்று பலரும் மணிங்சிலுவை மனதாரப் பாராட்டி வருகிறார்கள்.

ஆன்லைன் கல்வி முறையால் சரியாக படிக்காத மாணவ, மாணவிகள் நிச்சயம் இந்தச் சிறுமியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories