முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமையில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 487 வது வரிசையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு இப்போது சொத்து வரி உயர்த்தி மத்திய அரசு மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்று பேசினார்.

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

சொத்து வரி உயர்வால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வசித்த வாடகைதாரர்கள் இனி மாதம் ரூ.2,500 வாடகை செலுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.தி.மு.க. அரசை பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை உயர்த்துங்கள் என எந்த இடத்திலும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. மத்திய அரசு மீது பழியை சுமத்தி திமுக அரசு தப்பிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமையில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 487 வது வரிசையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு இப்போது அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன என திமுக அரசு நினைக்கிறது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டம் நடந்த போது வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கியதால் ஆர்ப்பாட்ட மேடைக்கு கீழே நின்ற தொண்டர்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. இதையறிந்த எடப்பாடி பழனிசாமி சட்டென தனது பேச்சை நிறுத்தி, கடுமையான வெயில் அடிக்குது கொஞ்சம் பொறுத்துகங்க, வேறு வழியில்லை, இதைவிட கடுமையான பாதிப்புகளை அரசு கொடுத்து வருகிறது”எனத் தெரிவித்தார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சியை பிடித்தது. தேர்தல் அறிக்கையில் கோவிட்டால், பொருளாதாரம் முடங்கிவிட்டதால், நிலைமை சீரடையும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறி இருந்தார்கள். ஆனால், 150 சதவீதம் வரியை உயர்த்தி உள்ளார்கள். இதனால், ஏழை எளிய மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கோவிட் 4வது அலை வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.
இச்சூழ்நிலையில் மக்களை வதைக்கும் வகையில் வரி உயர்வை அறிவித்துள்ளார்கள். எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாகவே உருக்கிறது. அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்திய போது ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் போராடினார். நாங்களும் திரும்ப பெற்றோம். இந்த அநியாய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இன்று அதிமுகவினர் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
screenshot33036 1649140283 - 2026
screenshot33042 1649142876 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories