கோடையிலும் குளிர்விக்கும் குற்றாலம்! மகிழ்ச்சியில் மக்கள்!

Published:

Courtallam - 2026

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் தென்காசி ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும் இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் மேலும் ஆர்ப்பரித்து வரும் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு உத்தரவின் பேரில் அருவியில் குளிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அனைத்து பிரதான அருவி, குற்றாலம் மெயின் அருவி ,ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவிகளில் நீரின்றி வறண்டு காணப்பட்டது.

இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் பிரதான அருவி குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து துவங்கியது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர். மேலும் கோடை வெயிலில் அருவியில் தண்ணீர் விழுவதால் குளித்து மகிழ்ந்து செல்வதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குறைவாக நீர்வரத்து வரத் துவங்கி உள்ளது.

Related articles

Recent articles

spot_img