வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை சுங்கச்சாவடி அருகே மாயமான சம்பவம்..

வெளியூர் சென்ற மளிகைக்கடைக்காரர் வேனில் வைத்திருந்த 264 பவுன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள். தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி மளிகைகடை நடத்தி வருகிறார்.

இவர் விளாத்திகுளத்தில் நடைபெற உள்ள திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் டெம்போ டிராவலர் வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது மகன் பெரியசாமி, மனைவி சித்ரா உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.

ஊருக்கு புறப்படும்போது நகை உள்பட முக்கிய பொருட்களை அட்டைபெட்டிகளில் கட்டி வேனின் மேல் பகுதியில் வைத்து சென்றுள்ளனர். ஊருக்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சுங்கசாவடி மைய பகுதியில் வேனை நிறுத்தி பொருட்கள் சரியாக உள்ளனவா? என்று பார்த்தனர்.

பின்னர் தியாகதுருகம் கூட்டுரோடு சின்னக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு டீக்கடையில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் டீ குடித்தனர். அப்போது பார்த்தபோது வேனின் மேல் இருந்த ஒரு அட்டைபெட்டி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

அந்த அட்டைபெட்டியில் 264 பவுன் தங்க நகைகள் இருந்ததது. அதிர்ச்சியடைந்த தங்கபெருமாள் இதுகுறித்து திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, தனிப்பிரிவு ஏட்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சுங்கச்சாவடி மற்றும் டீக்கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வேனின் மேல் இருந்த அட்டைபெட்டியை யாராவது திருடி சென்றனரா? அல்லது வழியில் அந்த பெட்டி தவறி விழுந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வேனை ஓட்டிவந்த செங்கல்பட்டை சேர்ந்த டிரைவர் பாண்டியிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

264 பவுன் நகை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படுவதில்லை. இதுவும் திருடர்கள் கைவரிசை காட்ட வசதியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
images 42 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories