பழமையான டைனோசர் கால்! ஆராய்ச்சியில் தகவல்!

Dinosaur - 2026

மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பூமியில் வாழ்ந்த விலங்கினமான டைனோசர்கள், பூமியோடு மோதிய ஒரு சிறுகோள் தாக்கத்தின் விளைவாக அழிந்துவிட்டன” என்பதே குறிப்பிட்ட உண்மை கதையின் தொடக்கமாகும்!

நாம் வாழும் இதே பூமியில், ஒருகாலத்தில் டைனோசர்களும் நடமாடின, உயிர் வாழ்ந்தன என்பது நமக்கு தெளிவாக தெரிந்திருந்தாலும் கூட அவற்றைப் பற்றி நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதே நிதர்சனம்.

ஒவ்வொரு நாளும், உலகின் ஏதோவொரு மூலையில், டைனோசர்களை பற்றி ஆராயும் ஏதோவொரு விஞ்ஞானிகள் குழு, டைனோசர்களைப் பற்றிய ஏதோவொரு புதிரின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.

அந்த புதிர்கள், மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பீரமான உயிரினங்களை பற்றிய பல விவரங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

இப்படியாக சமீபத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக, பூமிக்கடியில், இருட்டில் புதையுண்டு கிடந்த ஒரு டைனோசர் கால் புதைபடிவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் புதைபடிவங்களை விட இது ஏன் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது என்றால் – ஒரு சிறுகோள் பூமி கிரகத்துடன் மோதி முழு உயிரினங்களையும் “ஒரு நாள்” கொன்றது அல்லவா? இந்த டைனோசரின் கால் “அந்த நாள்” உடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது!

குறிப்பிட்ட புதைபடிவத்தின் நிலைமைகள் (conditions) விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது மற்றும் இது குறிப்பிட்ட ‘சிறுகோள் மோதல்’ சம்பவத்தின் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு நிச்சயமாக உதவும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள டானிஸ் புதைபடிவ தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியான இந்த டைனோசரின் கால், சுமார் 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதாவது 66 மில்லியன் ஆண்டுகள் என்றால், டைனோசர்களை அழித்த சிறுகோள், பூமி உடன் மோதிய காலத்தோடு கிட்டத்தட்ட ஒற்றுப்போகிறது.

இதுவரையிலாக குறிப்பிட்ட சிறுகோள் மோதல் நடந்து முடிந்து, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகான டைனோசர் எச்சங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; ஆனால் இது அப்படி இல்லை. இது குறிப்பிட்ட பேரழிவை ஏற்படுத்திய அதே நாளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

எனவே தான் இந்த டைனோசர் கால் புதைபடிவத்தின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆழமான ஆராய்ச்சிகளுக்கான சாத்தியக்கூறுகள் நிரம்பியதாகவும் காணப்படுகிறது.

இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது, டானிஸ் புதைபடிவ தளத்தில் நடக்கும் “தோண்டலுக்கு” தலைமை தாங்கும் மான்செஸ்டர் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் ராபர்ட் டிபால்மா, “(குறிப்பிட்ட சிறுகோள் தாக்கத்தின் போது) நிமிடத்திற்கு நிமிடம் என்ன நடந்தது என்பதை சொல்லும் பல விவரங்களை இந்த தளத்தில் நாங்கள் பெற்றுள்ளோம்.

இது திரையில் ஒரு படம் ஓடுவதை போல உள்ளது. நீங்கள் ராக் காளமை (rock column) பார்க்கிறீர்கள், அங்குள்ள புதைபடிவங்களைப் பார்க்கிறீர்கள், அது உங்களை ‘அந்த நாளுக்கு’ திரும்ப கொண்டு செல்கிறது”. என்று கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories