தமிழக மக்கள் இன்று சுபகிருது தமிழ்புத்தாண்டு சுபதினத்தை கோலாகோலமாக கொண்டாடிவரும் வேளையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு இன்று பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் இந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.