தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
30.04.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி 19.06.2022. இதற்க்கு தேர்வு மையம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகியவற்றில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.