நாடு முழுவதிலும் உள்ள 45,000 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ” மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்தப்படும்.
தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளால் பிரபலமான இந்த சுற்றுலா தலத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படும்..” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய ரயில் பயணிகளுக்கும் நற்செய்தி ஒன்றையும் வெளியிட்டார்.. அதாவது நாடு முழுவதிலும் உள்ள 45,000 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார். அதாவது தபால் நிலையங்களில் இனி ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின் அலகுகள் அமைக்க ரயில்வே நிதி அளிக்கும். இதன் மூலம் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். இந்த நோக்கத்திற்காக பைலட் திட்டம் தொடங்கப்படும், “என்று கூறினார்.
மேலும் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள துகாரியாவின் பெயரை பாகேஷ்வர் தாம் என மாற்றுவது குறித்து, மாநில அரசு முன்மொழிவை அனுப்பினால், அதன் பெயர் மாற்றப்படும்.
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டமும் விரிவுபடுத்தப்பட்டு, நிலையங்கள் மூலம் உள்ளூர் அளவிலான தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 1000 நிலையங்கள் சேர்க்கப்படும், அதில் சதர்பூர் ரயில் நிலையமும் சேர்க்கப்படும். என்று தெரிவித்தார்.