மேற்கு வங்கம் சுந்தரவனத்தில் படகில் இருந்து புலி ஒன்று கடலில் எகிறிக் குதித்து வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோக் காட்சி வைரலாகி வருகிறது.
வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடுவது அல்லது தங்களுடைய வாழ்விடங்களில் ஓய்வெடுப்பது போன்ற வீடியோக்கள் எப்போதும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானவை.
ஆனால் இன்னும் நம்பமுடியாத புலியின் வீடியோ காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. புலி ஒன்று படகில் இருந்து கடலில் துள்ளிக் குதித்துச் செல்லும் காட்சி அது.
ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ, மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனத்தில் படமாக்கப்பட்டது.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், புலி ஒன்று காட்டுக்குள் விடப்படுவதற்காக படகில் இருந்து குதிப்பதைக் காணலாம். புலியை மீட்டு விடுவிக்கும் வீடியோ 50,000 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது.
அந்த வீடியோவை பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த புலி கடலில் குதித்து திரும்பிக்கூட திரும்பாமல் வனப்பகுதிக்குள் சென்றது.
இது ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றும் ‘ரிச்சர்ட் பார்க்கர்’ என்ற புலியை நினைவுபடுத்தியதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
That tiger sized jump though. Old video of rescue & release of tiger from Sundarbans. pic.twitter.com/u6ls2NW7H3
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 17, 2022