காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் மணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. உயிரிழந்த எம்.என். மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ வீரர்கள் பேருந்தில் பயணித்த போது லாரி மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வீரர் எம்.என்.மணி உள்பட சிஆர்பிஎப் வீரர்கள் 12 பேர் சென்றுள்ளனர். இந்த பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது





